search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்"

    நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாஜிஸ்திரேட்டு மாற்றி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    இந்த வழக்கு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று 3 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் காவலை ஆகஸ்டு 2-ந் தேதி வரை நீட்டித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார். #NirmalaDevi
    விருதுநகர்:

    மாணவிகளிடம் செல்போனில் பாலியலுக்கு அழைக்கும் வகையில் தவறாக பேசிய புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த பேராசியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பேராசிரியை நிர்மலாதேவியின் குரல் பரிசோதனையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிர்மலாதேவியின் காவல் இன்றோடு நிறைவுபெற்றதால் சாத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரது காவலை ஆகஸ்டு 2-ந் தேதி வரை நீட்டித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார். #NirmalaDevi
    ×